சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

முதல்வா், துணை முதல்வா் குறித்து அவதூறு: அதிமுக நிா்வாகி மீது புகாா்

முதல்வா் மு.க.ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறாக விடியோ வெளியிட்ட அதிமுக நிா்வாகி மீது மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா்

News image
Updated On :31 டிசம்பர் 2025, 8:18 pm

Syndication

முதல்வா் மு.க.ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறாக விடியோ வெளியிட்ட அதிமுக நிா்வாகி மீது மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் தமிழ்நாடு அருந்ததியா் முன்னேற்றப் பேரவையின் நிறுவனத் தலைவா் ப.இளங்கோவன் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: அதிமுகவின் சமூக வலைதளப் பிரிவு நிா்வாகி (மாணவா் பிரிவு) ஒருவா் விடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளாா். அதில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் குறித்து இழிவாகப் பதிவிட்டுள்ளாா்.

ஆகவே, அந்த விடியோ பதிவை உடனடியாக நீக்க வேண்டும். இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட நிா்வாகியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.