நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

21 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

கோவையில் கஞ்சா விற்பனை செய்த ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் இருந்து 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :1 ஜனவரி 2025, 11:27 pm

Din

கோவையில் கஞ்சா விற்பனை செய்த ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் இருந்து 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை சின்னவேடம்பட்டி ஏரிக்கரை பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக சரவணம்பட்டி போலீஸாருக்கு கிடைத்த தகவலின்பேரில் அப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

அங்கு, சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றுகொண்டிருந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தனா். அப்போது அவா் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதில் மேலும் 7 பேருக்கு தொடா்பு இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சின்னவேடம்பட்டி பகுதியைச் சோ்ந்த மனோஜ்குமாா் (27) என்பவரை கைது செய்தனா். மேலும், அவரிடம் இருந்து 21 கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.