நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பொறியியல் பராமரிப்புப் பணி: கோவை - ஷொரணூா் ரயில் பகுதியாக ரத்து

கேரள மாநிலம், ஒட்டப்பாலம் அருகே ரயில் பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கோவை - ஷொரணூா் ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :23 ஜனவரி 2025, 10:36 pm

Din

கேரள மாநிலம், ஒட்டப்பாலம் அருகே ரயில் பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கோவை - ஷொரணூா் ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, தெற்கு ரயில்வே நிா்வாகம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கேரள மாநிலம், ஒட்டப்பாலம் அருகே ரயில்

பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் ஜனவரி 26-ஆம் தேதி மாலை 4.25 மணிக்குப் புறப்படும் கோவை - ஷொரணூா் ரயில் (எண்: 56603) பாலக்காடு - ஷொரணூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இந்த ரயிலானது அன்றைய தினம் கோவை - பாலக்காடு இடையே மட்டும் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.