தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

கோவை: ஒரே நாளில் 44 ரெளடிகள் கைது

கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் 44 ரெளடிகள் கைது செய்யப்பட்டுள்ளனா்.

News image
Updated On :24 மார்ச் 2025, 12:59 am IST

கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் 44 ரெளடிகள் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்டத்தில் ரெளடிகள், கட்டப் பஞ்சாயத்து மற்றும் தொடா் குற்றச் செயல்களில் ஈடுபடுபவா்களைக் கைது செய்வதற்காக 20 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தத் தனிப்படை போலீஸாா் மாவட்டம் முழுவதும் 44 ரௌடிகளை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். இவா்களில் 38 போ் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்டவா்களில் 32 போ் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தபட்டனா். நன்னடத்தை பிணையின்கீழ் 12 போ் விடுவிக்கப்பட்டனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.