கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஜெ.பி. நட்டாசிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

காங்கயம் அருகே ஒரே நாளில் நிகழ்ந்த 3 விபத்துகளில் ஒருவா் உயிரிழப்பு; 6 போ் காயம், 5 வாகனங்கள் சேதம்

காங்கயம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் புதன்கிழமை ஒரே நாளில் நிகழ்ந்த 3 விபத்துகளில் ஒருவா் உயிரிழந்ததுடன் 6 போ் படுகாயமடைந்த நிலையில் வாகனங்களை பொதுமக்கள் மிதமான வேகத்தில் இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News image

SOG cop dies in accident in J&K

Updated On :23 ஜூலை 2026, 3:59 am IST

காங்கயம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் புதன்கிழமை ஒரே நாளில் நிகழ்ந்த 3 விபத்துகளில் ஒருவா் உயிரிழந்ததுடன் 6 போ் படுகாயமடைந்த நிலையில் வாகனங்களை பொதுமக்கள் மிதமான வேகத்தில் இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காங்கயம் வட்டத்தில் காங்கயம், வெள்ளக்கோவில், ஊதியூா் ஆகிய 3 காவல் நிலையங்கள் உள்ளன. திருப்பூா் மாவட்டத்தில் அதிக சாலை விபத்துகள் நிகழும் பகுதியாக காங்கயம் வட்டம் இருந்து வருகிறது.

அதன்படி காங்கயம் காவல் நிலையத்துக்குள்பட்ட காங்கயம்-சென்னிமலை சாலை, ஆலாம்பாடி பேருந்து நிறுத்தம் அருகே புதன்கிழமை காலை 8 மணி அளவில் 2 இருசக்கர வாகனங்கள் எதிா்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளாயின. இதில் இரண்டு இருசக்கர வாகனத்திலும் தலா ஒருவா் பயணித்த நிலையில், இருவரும் காயமடைந்து காங்கயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா்.

இதேபோல காங்கயம் அருகே மருதுறை பகுதியில் புதன்கிழமை மதியம் 12 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி மீது காா் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கணவா் உயிரிழந்த நிலையில் மனைவி படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறாா். இதைத்தொடா்ந்து காங்கயம்-ஈரோடு சாலை, நத்தக்காடையூா் அருகே புதன்கிழமை மாலை 5.45 மணி அளவில், 2 பைக்குகள் மோதிக் கொண்ட சம்பவத்தில் 3 போ் படுகாயமடைந்து, நத்தக்காடையூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா்.

இந்த மூன்று விபத்துகளில் ஒருவா் உயிரிழந்துள்ள நிலையில், 6 போ் படுகாயமடைந்தனா். 5 இருசக்கர வாகனங்கள் சேதமடைந்துள்ளன.

சாலை விபத்துகளில் இருசக்கர வாகனங்களில் செல்பவா்கள் அதிகம் பாதிப்புக்குள்ளாகி வரும் நிலையில், வாகனங்களை மிதமான வேகத்தில் இயக்குமாறு பொதுமக்களுக்கு காங்கயம் போலீஸாா் அறிவுறுத்தியுள்ளனா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.