பிளஸ் 2: கோவை மத்தியச் சிறையில் 23 கைதிகள் தேர்ச்சி!

கல்வி முக்கியத்துவத்தை உணர்ந்த கைதிகள் சிறையில் சாதனை..
பிளஸ் 2: கோவை மத்தியச் சிறையில் 23 கைதிகள் தேர்ச்சி!
Published on
Updated on
1 min read

கோவை மத்தியச் சிறையில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் கைதிகள் 23 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கோவை மத்தியச் சிறையில் நடைபெற்ற பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 23 கைதிகள் சிறப்பான முறையில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்வு முடிவுகள் சிறைவாசிகளிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளின்படி, பாஸ்கர் என்பவர் 448 மதிப்பெண்கள் பெற்று சிறைவாசிகள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். இவரைத் தொடர்ந்து ஹரி கிருஷ்ணன் 430 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்தையும், துளசி கோவிந்தராஜன் 429 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

சிறைத்துறை அதிகாரிகளும், கல்வியாளர்களும் கைதிகளின் இந்த முயற்சியையும், வெற்றியையும் பாராட்டியுள்ளனர். தண்டனை பெற்று சிறையில் இருக்கும் கைதிகள் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து தேர்வெழுதியது மட்டுமல்லாமல், நல்ல மதிப்பெண்களும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இது மற்ற கைதிகளுக்கும் ஒரு உந்துதலாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com