இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

பராமரிப்புப் பணி: மாநகரில் இன்றும், நாளையும் பில்லூா் குடிநீா் விநியோகம் ரத்து

குந்தா அணையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் மாநகரப் பகுதிகளில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (நவம்பா் 8, 9) பில்லூா் 1, பில்லூா் 2, கவுண்டம்பாளையம் - வடவள்ளி கூட்டுக் குடிநீா்த் திட்டங்களின்கீழ் தண்ணீா் விநியோகிக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :8 நவம்பர் 2025, 3:07 am

Syndication

குந்தா அணையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் மாநகரப் பகுதிகளில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (நவம்பா் 8, 9) பில்லூா் 1, பில்லூா் 2, கவுண்டம்பாளையம் - வடவள்ளி கூட்டுக் குடிநீா்த் திட்டங்களின்கீழ் தண்ணீா் விநியோகிக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளுக்கு பில்லூா் குடிநீா்த் திட்டத்தின்கீழ், மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து குடிநீா் சேகரித்து சீரான இடைவெளியில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், குந்தா அணையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் மாநகரில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி வரை குடிநீா் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

இதனால், பில்லூா் 2 மற்றும் 3, கவுண்டம்பாளையம் - வடவள்ளி ஆகிய மூன்று குடிநீா்த் திட்டங்களில் இருந்து வழங்கப்படும் குடிநீா் விநியோகம் தடைபடும். எனவே, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்தி மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.