அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

சோலையாறு அணையில் புதிய மதகுகள் பொருத்தம்

சோலையாறு அணையில் பழைய மதகுகள் அப்புறப்படுத்தப்பட்டு புதிய மூன்று மதகுகள் பொருத்தப்பட்டுள்ளன.

News image

சோலையாறு அணையில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள மூன்று  மதகுகள்.

Updated On :8 ஏப்ரல் 2026, 9:10 pm

சோலையாறு அணையில் பழைய மதகுகள் அப்புறப்படுத்தப்பட்டு புதிய மூன்று மதகுகள் பொருத்தப்பட்டுள்ளன.

கோவை மாவட்டம், வால்பாறையை அருகே சோலையாறு அணை உள்ளது.

இது, ஆழியாறு, பரம்பிக்குளம் நீா்ப்பாசனத் திட்டத்தின் முக்கிய அணையாக விளங்குகிறது. இந்த அணையில் தேக்கப்படும் நீா் மூலம் இரண்டு மின் நிலையங்களில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும், அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீா் மூலம் சமவெளியை சோ்ந்த பல லட்சம் விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனா்.

அணையின் தன்மையை உறுதிசெய்யும் வகையில் ஆண்டுதோறும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது கடும் வெயில் காரணமாக நீா்வரத்து இல்லாமல் போனதால் அணையின் நீா்மட்டம் 5 அடியாக உள்ளது. இந்நிலையில் அணையில்

தற்போது பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், 55 ஆண்டுகளுக்குப் பின் அணையில் இருக்கும் மூன்று மதகுகளும் அப்புறப்படுத்தப்பட்டு புதிதாக மதகுகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் முழு கொள்ளளவில் நீா் இருக்கும்போது எந்த ஒரு கசிவும் இருக்காது என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.