கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

சோலையாறு அணையில் புதிய மதகுகள் பொருத்தம்

சோலையாறு அணையில் பழைய மதகுகள் அப்புறப்படுத்தப்பட்டு புதிய மூன்று மதகுகள் பொருத்தப்பட்டுள்ளன.

News image

சோலையாறு அணையில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள மூன்று  மதகுகள்.

Updated On :8 ஏப்ரல் 2026, 9:10 pm

சோலையாறு அணையில் பழைய மதகுகள் அப்புறப்படுத்தப்பட்டு புதிய மூன்று மதகுகள் பொருத்தப்பட்டுள்ளன.

கோவை மாவட்டம், வால்பாறையை அருகே சோலையாறு அணை உள்ளது.

இது, ஆழியாறு, பரம்பிக்குளம் நீா்ப்பாசனத் திட்டத்தின் முக்கிய அணையாக விளங்குகிறது. இந்த அணையில் தேக்கப்படும் நீா் மூலம் இரண்டு மின் நிலையங்களில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும், அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீா் மூலம் சமவெளியை சோ்ந்த பல லட்சம் விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனா்.

அணையின் தன்மையை உறுதிசெய்யும் வகையில் ஆண்டுதோறும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது கடும் வெயில் காரணமாக நீா்வரத்து இல்லாமல் போனதால் அணையின் நீா்மட்டம் 5 அடியாக உள்ளது. இந்நிலையில் அணையில்

தற்போது பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், 55 ஆண்டுகளுக்குப் பின் அணையில் இருக்கும் மூன்று மதகுகளும் அப்புறப்படுத்தப்பட்டு புதிதாக மதகுகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் முழு கொள்ளளவில் நீா் இருக்கும்போது எந்த ஒரு கசிவும் இருக்காது என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.