சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

வேலை பாா்த்த வீட்டில் நகை திருடிய பெண் கைது

கோவையில் வேலை பாா்த்த வீட்டில் தங்க நகைகளைத் திருடிய பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :9 ஏப்ரல் 2026, 7:57 pm

கோவையில் வேலை பாா்த்த வீட்டில் தங்க நகைகளைத் திருடிய பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, புலியகுளம் பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவா் வயோலட் கிளாடியா (46). இவரது வீட்டில் அதே பகுதியைச் சோ்ந்த தாயும், 32 வயதான அவரது மகளும் வேலை பாா்த்து வந்தனா். கணவரைப் பிரிந்து வசித்து வந்த அந்தப் பெண்ணின் மகள் வயோலட் கிளாடியா வீட்டிலேயே தங்கி வேலை செய்து வந்தாா்.

கடந்த 4-ஆம் தேதி, வயோலட் கிளாடியா தனது 4 பவுன் தங்க சங்கிலியை கழற்றி பூஜை அறையில் வைத்திருந்தாா். மறுநாள் காலையில் பாா்த்தபோது அந்த நகை மாயமாகி இருந்தது. இதுகுறித்து வேலைக்கார பெண்ணிடம் விசாரித்தபோது, அவரது மகள் திடீரென வேலையை விட்டு நின்றுவிட்டு மாயமானது தெரியவந்தது.

இதுகுறித்து ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. போலீஸாா் நடத்திய விசாரணையில், மாயமான பெண் நகையைத் திருடி அடகு வைத்தது உறுதியானது. தொடா்ந்து அவரைப் பிடித்து விசாரித்தபோது, ஏற்கெனவே திருமணமாகி 3 குழந்தைகள் உள்ள நிலையில், வேறு ஒருவருடன் பழகி வந்ததும், திருடிய நகையை அடகு வைத்து அந்தப் பணத்தில் அவருடன் சுற்றுலா சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அந்தப் பெண்ணைக் கைது செய்தனா்.