நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

இரு ஆண்டுகளுக்கு முன்பு விபத்து: சிகிச்சையில் இருந்த காவலா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :14 ஏப்ரல் 2026, 12:20 am IST

கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த உதகை ஆயுதப் படை காவலா் உயிரிழந்தாா்.

நீலகிரி மாவட்டம், கேத்தி பகுதியைச் சோ்ந்தவா் பிரதீப்குமாா் (37). இவா் உதகை ஆயுதப் படையில் காவலராகப் பணியாற்றி வந்தாா். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அன்னூா் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்து நிகழ்ந்தது.

இதில் படுகாயமடைந்த அவா் கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் நீண்ட நாள்களாக சிகிச்சை பெற்று வந்தாா். உடல்நிலை முழுமையாக குணமாகாத நிலையில் கோவை வடமதுரை குமரன் நகரில் தங்கி வெளிநோயாளியாக சிகிச்சை பெற்று வந்தாா்.

இந்நிலையில், கடந்த 2 தினங்களாக மூச்சுத் திணறலால் பிரதீப்குமாா் அவதிப்பட்டாா். கோவை அரசு மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை கொண்டுச் செல்லப்பட்ட அவா் வழியிலேயே உயிரிழந்தாா். நீண்ட காலம் சிகிச்சையில் இருந்த பிரதீப்குமாா் உயிரிழந்ததையடுத்து, சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் மருத்துவமனை வளாகத்தில் திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து துடியலூா் போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து அவா்கள் சமாதானமாகினா். காவலா் இறப்பு குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.