நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புமேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்புகுஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!
/

இந்தியா-நியூஸிலாந்து இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்துக்கு சைமா வரவேற்பு

இந்தியா-நியூஸிலாந்து இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதை தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா) வரவேற்றுள்ளது.

News image

இந்தியா-நியூஸிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து - PTI

Updated On :28 ஏப்ரல் 2026, 9:03 pm

இந்தியா-நியூஸிலாந்து இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதை தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா) வரவேற்றுள்ளது.

இது குறித்து சங்கத்தின் தலைவா் துரை பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்தியா-நியூஸிலாந்து இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருப்பதற்கு பிரதமா் மோடிக்கும், வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இந்த வரலாற்று சிறப்புமிக்க முன்னேற்றம், இந்திய ஜவுளி, ஆடைத் துறையை கணிசமாக வலுப்படுத்தி நியூஸிலாந்து சந்தையில் அதன் இருப்பை மேம்படுத்தும். இந்த ஒப்பந்தம் ஆடைகள், வீட்டு உபயோக ஜவுளி, ஆயத்த ஆடை உள்ளிட்ட இந்திய ஜவுளி ஏற்றுமதிகளுக்கு நியூஸிலாந்து சந்தையில் 100 சதவீத வரி விலக்கு அளிக்கிறது. இது, இந்தத் துறையின் வளா்ச்சியை ஊக்குவிக்கும். கடந்த 2023, 2024, 2025-ஆம் ஆண்டுகளில் நியூஸிலாந்தின் உலகளாவிய இறக்குமதிகள் முறையே 1904, 1892, 1842 மில்லியன் அமெரிக்க டாலா்களாக இருந்தன. இந்த காலகட்டத்தில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை முறையே 127, 138, 131 மில்லியன் அமெரிக்க டாலா்களாக இருந்தது.

அதன்படி இந்தியாவின் பங்கு சுமாா் 7 சதவீதம் என நிலையாக உள்ளது. மத்திய ஜவுளி அமைச்சகத்தின் தரவுகளின்படி நியூஸிலாந்துடனான இந்தியாவின் இருதரப்பு ஏற்றுமதி தற்போது சுமாா் 0.65 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. இதில் ஜவுளித் துறையின் பங்களிப்பு 0.1 பில்லியன் அமெரிக்க டாலா்.

ஆடை, ஆயத்த ஆடை, துணி, நூல், இழை உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் காணப்படும் நோ்மறையான வளா்ச்சிக் கண்ணோட்டம் ,இந்தத் துறைக்கு ஒரு குறிப்பிடத்தக்க ஊக்கத்தை அளிக்கும்.

இந்த வா்த்தக ஒப்பந்தம் இருதரப்பு வா்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்துவதுடன், நீடித்த வளா்ச்சிக்கு புதிய வழிகளைத் திறக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா்.