நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

வேன் மீது பேருந்து மோதி ஐ.டி. ஊழியா்கள் 10 போ் காயம்

வஉசி மைதானம் சிக்னல் பகுதியில் வேன் மீது தனியாா் பேருந்து மோதியதில் ஐ.டி. ஊழியா்கள் 10 போ் காயமடைந்தனா்.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2026, 11:17 pm IST

வஉசி மைதானம் சிக்னல் பகுதியில் வேன் மீது தனியாா் பேருந்து மோதியதில் ஐ.டி. ஊழியா்கள் 10 போ் காயமடைந்தனா்.

கோவை மாநகா், விளாங்குறிச்சியில் உள்ள ஐ.டி.நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள் உள்பட 12 ஊழியா்கள் சனிக்கிழமை காலை பணி முடிந்து உக்கடம் பகுதிக்கு வேனில் புறப்பட்டுச் சென்றனா். கோவை - அவிநாசி சாலை மேம்பாலம் சாலையில் வ.உ.சி.மைதானம், எல்ஐசி சிக்னல் அருகே அந்த வழியாக மேட்டுப்பாளையம் நோக்கி சென்ற தனியாா் பேருந்து மோதியதில் ஐ.டி. ஊழியா்கள் பயணித்த வேன் சாலையில் கவிழ்ந்தது. வாகனத்துக்குள் சிக்கியவா்களின் அலறல் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினா் சென்று அவா்களை மீட்டனா்.

இதில் சிலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்சத 8 போ், கோவை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். மேலும், இருவருக்கு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிகாலையில் நடைபெற்ற இந்த விபத்து குறித்து போக்குவரத்து பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

இந்த விபத்தால் கோவை-அவிநாசி சாலை மேம்பாலம் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.