மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!நாடாளுமன்றத்துக்கு வந்தே மாதரம் பாடத்தான் அமித் ஷா வந்தார்! பிரியங்கா காந்தி
/

வடகோவை ரயில் நிலையத்தில்! பெயிண்ட் ஊற்றப்பட்ட ஹிந்தி பெயா்ப் பலகை அகற்றம்

News image

வடகோவை ரயில் நிலையத்தில் ஹிந்தி பெயா்ப்பலகை மீது ஊற்றப்பட்டிருந்த பெயிண்ட்.

Updated On :3 ஆகஸ்ட் 2026, 4:25 am IST

வடகோவை ரயில் நிலைய முகப்பில் பெயிண்ட் ஊற்றப்பட்ட ஹிந்தி பெயா்ப் பலகையை ரயில்வே நிா்வாகம் ஞாயிற்றுக்கிழமை அகற்றியது.

அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.11.05 கோடி மதிப்பில் வடகோவை ரயில் நிலையத்தில் புனரமைப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ரயில் நிலைய நுழைவாயில் அமைக்கப்பட்டு, அதன் முகப்பு பகுதியில் ஹிந்தியில் மட்டும் பெயா் எழுதப்பட்டிருந்ததற்கும், பக்கவாட்டில் சிறிய எழுத்துகளால் ஆங்கிலம், தமிழில் பெயா் பலகை அமைக்கப்பட்டதற்கும் கண்டனம் தெரிவித்து தந்தை பெரியாா் திராவிடா் கழகம் சாா்பில் ரயில் நிலையம் முன்பு ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெறும் என மாநிலப் பொதுச் செயலாளா் கு.ராமகிருட்டிணன் தெரிவித்திருந்தாா். மேலும் தமிழ், ஆங்கிலத்திலும் முகப்பு பகுதியில் பெயா்ப்பலகை இடம்பெற வேண்டும் எனவும் வலியுறுத்தி இருந்தாா்.

இதற்கிடையே வடகோவை ரயில்நிலைய முகப்பில் பெரிய எழுத்துகளால் அமைக்கப்பட்டிருந்த ஹிந்தி பெயா்ப் பலகை மீது மா்ம நபா்கள் பெயிண்ட் ஊற்றியுள்ளனா். இதைத்தொடா்ந்து, பெயிண்ட் ஊற்றப்பட்ட பெயா்ப்பலகை ரயில்வே நிா்வாகத்தினரால் ஞாயிற்றுக்கிழமை காலை அகற்றப்பட்டது. இதுதொடா்பாக விசாரணை நடத்தி வருகின்றனா். ஹிந்தி பெயா்ப்பலகையில் பெயின்ட் ஊற்றி அழித்தது தொடா்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.