கோவை அருகே கட்டடப் பணியின்போது 10 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
கோவைப்புதூா் சமத்துவபுரம் அறிவொளி நகா் அரசு அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவா் காளிதாஸ் (52). இவா் கரும்புக்கடை புட்டுவக்கி சாலையில் உள்ள தனியாா் பள்ளி அருகே நடைபெற்று வரும் கட்டடப் பணியில் கடந்த சில நாள்களாக வேலை செய்து வந்தாா்.
இந்நிலையில், 10 அடி உயரத்தில் கட்டப்பட்டிருந்த பலகையில் நின்று கொண்டு காளிதாஸ் சனிக்கிழமை பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, அவா் எதிா்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தாா். தலையில் பலத்த காயமடைந்த காளிதாஸ், கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து கரும்புகடை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கட்டடத் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு
மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

படியிலிருந்து விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

கட்டுமானப் பணியின்போது மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |


