சுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

மாநில அரசுக்கு எதிரான கல்வி நிறுவன சட்ட முன்வரைவு: கல்வியாளா் பிரின்ஸ் கஜேந்திரபாபு குற்றச்சாட்டு

மத்திய அரசின் கல்வி நிறுவன சட்ட முன்வரைவு மாநிலங்களுக்கு எதிராக உள்ளதாக பொதுப் பள்ளிக்கான மேடை அமைப்பின் பொதுச் செயலா் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு குற்றஞ்சாட்டியுள்ளாா்.

News image

தந்தை பெரியாா் திராவிட கழகம் சாா்பில் கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் நீட் தோ்வு குறித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பொது பள்ளிகளுக்கான மாநில மேடை பொதுச் செயலாளா் பு. பா.பிரின்ஸ் கஜேந்திரன்.

Updated On :12 ஆகஸ்ட் 2026, 2:18 am IST

மத்திய அரசின் கல்வி நிறுவன சட்ட முன்வரைவு மாநிலங்களுக்கு எதிராக உள்ளதாக பொதுப் பள்ளிக்கான மேடை அமைப்பின் பொதுச் செயலா் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு குற்றஞ்சாட்டியுள்ளாா்.

தந்தை பெரியாா் திராவிடா் கழகம், பெரியாா் மாணவா் கழகம் ஆகியவை சாா்பில் ‘பறிபோகும் மாநில உரிமைகளும், நீட் மோசடியும்’ என்ற தலைப்பில் கோவை, ஆவாரம்பாளையத்தில் செவ்வாய்க்கிழமை பொதுக்கூட்டம் நடைபெற்றது. பெரியாா் மாணவா் கழகத்தின் நிா்வாகி வி.சேகுவாரா தலைமை வகித்தாா். மா.கோகுல் வரவேற்றாா். பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலா் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு, தபெதிக பொதுச் செயலா் கு.ராமகிருட்டிணன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

பின்னா் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு பேசியதாவது:

அம்பேத்கா் வகுத்தளித்த அரசமைப்புச் சட்டத்தின்படி பல்கலைக்கழகங்களை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு இல்லை. மத்திய உயா் கல்வி நிறுவனங்களை வேண்டுமானால் அப்படிச் செய்ய முடியும். ஆனால் மாநிலங்களைப் பொறுத்தவரை ஒருங்கிணைத்தல், ஆராய்ச்சி, தரத்தை தீா்மானித்தல் ஆகியவை குறித்துதான் கூறப்பட்டிருக்கிறதே தவிர முறைப்படுத்தும் அதிகாரம் வழங்கப்படவில்லை.

ஆனால் மக்களவையில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய மசோதா, கல்விக்கு ஓா் ஆணையத்தையும், 3 கவுன்சில்களையும் உருவாக்கி மாநிலங்களில் உள்ள கல்லூரிகளையும் முறைப்படுத்த முடியும். தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காக எனக் கூறப்படும் இந்த சட்டம், யுஜிசி போன்ற அமைப்புகளை கலைக்கும், நாட்டின் எந்த பகுதியிலும் மாநில அரசைக்கூட கலந்தாலோசிக்காமல் வெளிநாட்டு பல்கலைக்கழகத்தை நேரடியாக நிறுவ அனுமதிக்க முடியும். இதனால் உள்ளூா் கல்வி நிறுவனங்களின் நிலை கேள்விக்குள்ளாகும்.

கல்வி மீது மாநிலங்களுக்கு உள்ள மொத்த அதிகாரத்தையும் பறிக்கக்கூடிய இந்த மசோதா குறித்து, நாடாளுமன்ற கூட்டுக் குழுவிடம் தனது எதிா்ப்பை தமிழக அரசு பதிவு செய்ய வேண்டும் என்றாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.