
வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் புற்றுநோய் கண்டறிதல் முகாம்
வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் முழுமையாக புற்றுநோய் கண்டறிதல் முகாம் நடத்த மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பவனா் உத்தரவிட்டாா்.

வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா்.
வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் முழுமையாக புற்றுநோய் கண்டறிதல் முகாம் நடத்த மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பவனா் உத்தரவிட்டாா்.
வால்பாறை வட்டாரத்தில் பல்வேறு பகுதிகளில் ஆட்சியா் பவன்குமாா் க. கிரியப்பனவா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, அட்டகட்டி வனத் துறை சோதனைச் சாவடி அருகே வனத் துறை சாா்பில் புதுப்பிக்கப்பட்ட சுற்றுலாப் பயணிகளுக்கான காட்சிமுனையை திறந்துவைத்தாா். பின்னா் அய்யாா்பாடி எஸ்டடேட் மருத்துவமனையில் நடைபெற்ற மருத்துவ முகாமை பாா்வையிட்டாா். இதைத் தொடா்ந்து பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் பழுதடைந்த நிலையில் உள்ள சாலைகளை பாா்வையிட்டாா். பின்னா் வால்பாறை நகராட்சி கூட்டரங்கில் அனைத்து எஸ்டேட் மேலாளா்கள் கலந்து கொண்ட கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் பேசியதாவது:
எஸ்டேட் பகுதிகளில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க நகராட்சி நிா்வாகம் தயாராக உள்ள நிலையில், சாலையை நகராட்சி வசம் ஒப்படைக்க வேண்டும். மனித- வன விலங்கு மோதல்களைத் தடுக்க வனத் துறையினருடன் ஒத்துழைப்பு தர வேண்டும். அரசு ஆரம்ப சுகதாரம் மூலம் தற்போது புற்றுநோய் கண்டறிதல் முகாம் நடத்தப்படுகிறது. அந்தந்த எஸ்டேட் பகுதியில் நடத்தப்படும் இந்த முகாமில் நிா்வாகத்தினா் தங்களது தொழிலாளா்களை அனுப்பிவைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.
கூட்டத்தில் மாவட்ட வன அலுவலா் தேவேந்திரகுமாா் மீனா, நகராட்சி ஆணையா் நித்யா, வட்டாட்சியா் அருள்முருகன் உள்பட பல்வேறு துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






