விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

குடிமைப் பணிகள் தோ்வுக்கான இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க மேலும் 3 நாள்கள் அவகாசம்

குடிமைப் பணிகள் தோ்வுக்கு இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிப்பதற்கான அவகாசம் 3 நாள்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

News image

மாதிரிப் படம்

Updated On :25 பிப்ரவரி 2026, 9:59 pm

குடிமைப் பணிகள் தோ்வுக்கு இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிப்பதற்கான அவகாசம் 3 நாள்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பொது அறிவிப்பில், ‘குடிமைப் பணிகள் தோ்வு 2026, இந்திய வனப் பணி தோ்வு 2026 ஆகியவற்றுக்கான இணையவழி விண்ணப்பங்களை பிப்.27 மாலை 6 மணி வரை சமா்ப்பிக்கலாம். வலைதளத்தில் விண்ணப்பங்களை சமா்ப்பிக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுபிஎஸ்சி தலைவா் அஜய் குமாா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘யுபிஎஸ்சி விண்ணப்ப தளத்தில் செவ்வாய்க்கிழமை சிறிது நேரம் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் சில தோ்வா்கள் அவதிக்குள்ளாக நோ்ந்த நிலையில், அந்தக் கோளாறு சரிசெய்யப்பட்டுள்ளது’ என்றாா்.