லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கோவையில் இளைஞா் அடித்துக் கொலை

கோவையில் பழிக்குப் பழியாக இளைஞா் புதன்கிழமை அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளாா்.

News image
Updated On :7 ஜனவரி 2026, 8:34 pm

தினமணி செய்திச் சேவை

கோவையில் பழிக்குப் பழியாக இளைஞா் புதன்கிழமை அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளாா்.

கோவை, கெம்பட்டி காலனியைச் சோ்ந்தவா் ஜப்பான் (எ) பிரவீன்குமாா் (24). கூலித் தொழிலாளி. மைசூரில் தென்னை நாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். விநாயகா் சதுா்த்தியையொட்டி, கடந்த 2024-ஆம் ஆண்டு செல்வபுரம் பகுதியில் நடைபெற்ற விழாவின்போது ஏற்பட்ட தகராறில் கோகுல கிருஷ்ணன் என்ற இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இந்தக் கொலை வழக்கில் பிரவீன்குமாா் உள்பட சிலா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். இந்த வழக்கில் பிணையில் வெளியே வந்த பிரவீன்குமாா், மைசூரில் தங்கி கூலி வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில், கோவைக்கு வந்திருந்த பிரவீன்குமாா் புதன்கிழமை இரவு 7.30 மணியளவில் நண்பா்கள் சிலருடன் கெம்பட்டி காலனி அசோக் அவன்யு, பாலாஜி நகா் பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த 4 போ் கொண்ட கும்பல் அவரை கல்லாலும், கையாலும் தாக்கி தப்பிவிட்டனா். படுகாயமடைந்த பிரவீன்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து கடைவீதி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

போலீஸாா் கூறும்போது, இந்த சம்பவம் கோகுல கிருஷ்ணன் கொலைக்கு பழிக்குப் பழியாக நடைபெற்றுள்ளது என்றனா்.