இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

டவுன்ஹாலில் நடைபாதை, சாலையோர ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்ற வலியுறுத்தல்

கோவை, டவுன்ஹால் பகுதியில் உள்ள கடைவீதிகளில் நடைபாதை, சாலை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

News image
கோவை பெரியகடைவீதி பகுதியில் நடைபாதையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள கடைகள். ~கோவை, பெரியகடைவீதி பகுதியில் நடைபாதையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள கடைகள்.
Updated On :7 ஜனவரி 2026, 8:32 pm

தினமணி செய்திச் சேவை

கோவை, டவுன்ஹால் பகுதியில் உள்ள கடைவீதிகளில் நடைபாதை, சாலை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

டவுன்ஹாலில் உள்ள பெரியகடை வீதி, ஒப்பணக்கார வீதி, ராஜ வீதி, ரங்கே கவுடா் வீதியில் துணிக்கடைகள், நகைக் கடைகள், பேன்சி மற்றும் அலங்கார உபயோகப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் ஏராளமாக உள்ளன. இங்கு பொருள்களை வாங்க பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் கூட்டம் காலை முதலே அதிகரித்துக் காணப்படும்.

பேருந்துகள், இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் சாலையில் செல்லும் நிலையில், சாலையை ஒட்டி பாதசாரிகள் செல்ல நடைபாதையும் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கடைவீதியில் சில இடங்களில் நடைபாதை மற்றும் பிரதானச் சாலையை ஆக்கிரமித்து தள்ளுவண்டிக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால், அப்பகுதியில் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாவதுடன், போக்குவரத்து நெரிசலும் தவிா்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், 5 முக்கு உள்ளிட்ட பிரதான பகுதிகளில் பேருந்துகள் செல்வதற்கு சிரமமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள கடைகளை மாநகராட்சி நிா்வாகம் அகற்றி, வாகனங்கள், பாதசாரிகள் சென்று வர நெரிசலற்ற சூழ்நிலையை ஏற்படுத்தித் தர வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனா்.

Story image