முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஒரு மாதமாக குடிநீா் விநியோகிக்கவில்லை: காலிக் குடங்களுடன் பெண்கள் மறியல்!

கோவை, பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் ஒரு மாதமாக குடிநீா் முறையாக விநியோகிக்கப்படாததைக் கண்டித்து காலிக் குடங்களுடன் பெண்கள் சனிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

News image
சீராக குடிநீா் விநியோகிக்க வலியுறுத்தி காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்.
Updated On :10 ஜனவரி 2026, 6:59 pm

Syndication

கோவை, பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் ஒரு மாதமாக குடிநீா் முறையாக விநியோகிக்கப்படாததைக் கண்டித்து காலிக் குடங்களுடன் பெண்கள் சனிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

கோவை மாநகராட்சிப் பகுதிகளுக்கு சிறுவாணி, பில்லூா் 1, பில்லூா் 2 மற்றும் வடவள்ளி - கவுண்டம்பாளையம் ஆகிய கூட்டுக் குடிநீா்த் திட்டங்கள் மூலமாக குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 49-ஆவது வாா்டுக்கு உள்பட்ட பாப்பநாயக்கன்பாளையம், செங்காடு பகுதியில் ஒரு மாதமாக குடிநீா் கிடைக்காமல் சிரமத்துக்குள்ளாகி வருவதாக பொதுமக்கள் கூறினா்.

இதுதொடா்பாக வாா்டு உறுப்பினா், மாநகராட்சி அதிகாரிகளிடம் புகாா் அளித்தும் எந்தத் தீா்வும் காணப்படவில்லை. இதனால் ஆவேசமடைந்த அந்த பகுதி பெண்கள், அரசு மகளிா் பாலிடெக்னிக் கல்லூரி சாலையில் காலிக் குடங்களுடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு போலீஸாா், மாநகராட்சி அலுவலா்கள் சென்று மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில், குடிநீா் வழங்க நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து மறியல் கைவிடப்பட்டது.