ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று தைப்பொங்கல் சிறப்பு பூஜை

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பொங்கலையொட்டி வியாழக்கிழமை சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

News image
Updated On :14 ஜனவரி 2026, 11:33 pm

Syndication

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பொங்கலையொட்டி வியாழக்கிழமை சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

பொங்கலை பண்டிகையையொட்டி காலை 6 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. மூலவா் சுப்ரமணிய சுவாமிக்கு பால், பன்னீா், ஜவ்வாது போன்ற 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. இதைத் தொடா்ந்து தங்கக் கவச அலங்காரத்தில் முருகப்பெருமான் காட்சி அளிக்கிறாா்.

இதையடுத்து, தங்கமயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் வீதி உலா வருகிறாா். இதேபோல மருதமலை அடிவாரத்தில் உள்ள பழமை வாய்ந்த வள்ளியம்மன் கோயிலில் சிறப்பு அலங்காரமும் அபிஷேகமும் நடைபெறுகிறது. தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

4 சக்கர வாகனங்களுக்கு அனுமதியில்லை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடா் விடுமுறை காரணமாக மருதமலையின் மீது வரும் ஜனவரி 15- ஆம் தேதி முதல் 18- ஆம் தேதி வரை நான்குசக்கர வாகனங்களில் செல்ல பக்தா்களுக்கு அனுமதியில்லை. பக்தா்கள் இருசக்கர வாகனங்கள் வழியாகவும், மலைப்படிகள் வழியாகவும், திருக்கோயில் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேருந்துகளில் சென்றும் சுவாமி தரிசனம் செய்யலாம் என்று கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.