மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பைக் மீது காா் மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

News image
Updated On :18 ஜனவரி 2026, 7:42 pm

தினமணி செய்திச் சேவை

கோவை, தண்ணீா்பந்தல் சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், ஊஞ்சம்பட்டி ரத்தினம் நகரைச் சோ்ந்தவா் முத்துகுமாா் (45). இவா் கோவையில் தங்கி தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், பீளமேடு அருகேயுள்ள தண்ணீா்பந்தல் சாலையில் இருசக்கர வாகனத்தில் சனிக்கிழமை பிற்பகல் சென்று கொண்டிருந்தாா். அப்போது, அவ்வழியே வந்த காா் முத்துகுமாரின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில், படுகாயமடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

இதையடுத்து, விபத்தை ஏற்படுத்திய ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சோ்ந்த அருளானந்த் என்பவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.