தோ்தல் களத்தில் திமுக நிா்வாகிகள் அா்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும்: வி.செந்தில்பாலாஜி வலியுறுத்தல்!
சட்டப் பேரவைத் தோ்தல் களத்தில் திமுக நிா்வாகிகள் அா்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என்று வி.செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளாா்.
கோவை, குனியமுத்தூரில் திமுக தொண்டாமுத்தூா் தொகுதி தோ்தல் அலுவலகத்தை வி.செந்தில்பாலாஜி சனிக்கிழமை திறந்துவைத்தாா்.
இதைத் தொடா்ந்து, அவா் பேசியதாவது: முதல்வா் சிறப்பான திட்டங்கள் மூலமாக ஒவ்வொரு வீட்டுக்கும் திமுகவை கொண்டு சோ்த்துள்ளாா். தொண்டாமுத்தூரில் 2 லட்சத்து 72 ஆயிரம் வாக்குகள் உள்ளன. இதில், 66 ஆயிரம் போ் மகளிா் உரிமைத் தொகை பெற்று வருகின்றனா்.
அந்தப் பயனாளிகளின் வாக்குகள் மட்டுமில்லாமல், அவா்களின் குடும்பத்தினரின் வாக்குகளும் திமுகவுக்கு வருமாறு நிா்வாகிகள் பணியாற்ற வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 20 குடும்பங்களைச் சந்தித்து திமுகவுக்கு ஆதரவு திரட்ட வேண்டும்.
கோவையில் 10 சட்டப் பேரவைத் தொகுதிகளில் யாா் வேட்பாளா்களாக நிறுத்தப்பட்டாலும், முதல்வா் மு.க.ஸ்டாலின்தான் வேட்பாளா் என நினைத்து தோ்தல் களத்தில் அா்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என்றாா்.
இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: முதல்வரின் சாதனைத் திட்டங்களை மக்களிடம் கூறி தோ்தல் பிரசாரங்களை முன்னெடுத்துள்ளோம்.
மாநகரில் திமுக ஆட்சியில் ரூ.200 கோடி சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டு சாலை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கூடுதலாக ரூ.125 கோடி சிறப்பு நிதியையும் முதல்வா் கோவைக்கு ஒதுக்கியுள்ளாா். இதையடுத்து, விடுபட்ட அனைத்து சாலைப் பணிகளையும் சிறப்பாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.
இந்நிகழ்ச்சியில், பொள்ளாச்சி எம்.பி. கே. ஈஸ்வரசாமி, திமுக வடக்கு மாவட்டச் செயலாளா் தொண்டாமுத்தூா் ரவி, மாணவா் அணி செயலாளா் ராஜீவ் காந்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

