காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வருவது முதல்வரின் உறுதியான முடிவு

News image

கோவை வடவள்ளியில் மக்களிடம் அடிப்படை வசதிகள் குறித்து குறைகளைக் கேட்டறிந்த அமைச்சா் வி.சம்பத்குமாா்.

Updated On :27 ஜூலை 2026, 12:26 am IST

கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வருவது முதல்வரின் உறுதியான முடிவு என பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் வி.சம்பத்குமாா் தெரிவித்தாா்.

கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலம் 36-ஆவது வாா்டுக்கு உள்பட்ட வடவள்ளி பேருந்து நிலையம், உழவா் சந்தை பகுதிகளில் குடிநீா் விநியோகம், தெரு விளக்குகள், மழைநீா் வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் வி.சம்பத்குமாா், மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

தொடா்ந்து, ஹேப்பி காா்டன், சூப்பா் காா்டன் பகுதிகளில் மழைநீா் வடிகால் தூா்வாரும் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். இந்த ஆய்வின்போது, மண்டல உதவி ஆணையா் நா்மதா, துணை தலைமைப் பொறியாளா் எழில் (பொறுப்பு), உதவி செயற்பொறியாளா் சவிதா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முன்னதாக, கோவை காந்திபுரம் 68-ஆவது வாா்டில் தவெக கட்சி அலுவலகம் திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள், பள்ளிக் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடந்த ஆட்சியில் தரப்பட்ட ஆவணங்கள், தரவுகளால் கோவை மெட்ரோ ரயில் திட்டம் மத்திய அரசால் மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது, மீண்டும் புதிய வரையறைகள், ஆவணங்கள், தரவுகளைத் தரவுள்ளோம். அதனை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது. கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வருவது முதல்வரின் உறுதியான முடிவு. அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.