குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்க ரூ. 35,000 கோடி ஒதுக்கீடுலெபனானில் தாக்குதல்கள் தொடா்ந்தால் போா்நிறுத்தம் ரத்து: ஈரான் எச்சரிக்கைகோடையில் அதிகரிக்கும் மாரடைப்புகள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை!3வது குழந்தை பெற சலுகை அறிவிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை! விசிக எம்.பி., ரவிக்குமார்நீட்: கல்வி அமைச்சருக்கு எதிராக போராட்டம்! கரப்பான்பூச்சி கட்சித் தலைவர் இந்தியா வருகிறார்!புதிய கட்சி தொடங்கப்போகிறீர்களா? 2 நாள்களில் பதில் சொல்கிறேன் - அண்ணாமலை பேட்டிஆட்சிக்கு வந்த பிறகும் திமுகவை குறை சொல்கிறார் விஜய் : கனிமொழிரீல்ஸ் போட்டவர்கள் நியூஸ் பார்க்கிறார்கள்: இளைஞர்கள் அரசியலை கவனிக்கின்றனர் - விஜய்அரை நூற்றாண்டு சாதி, மத அரசியலை உடைத்திருக்கிறோம்: திருச்சியில் விஜய் பேச்சுதிமுக - தவெக இடையேதான் போட்டி: திருச்சியில் விஜய் பேச்சுசிங்கப்பெண் காவல் படை அடுத்த வாரம் தொடங்கப்படும்! முதல்வர் விஜய்திருச்சி கிழக்கில் சாமானியனை வேட்பாளராக நிறுத்துவேன்: முதல்வர் விஜய்
/

மாநகராட்சி பூங்காக்களில் மேயா் ஆய்வு

காந்தி மாநகா், கணபதி மாநகா் பூங்காக்களில் கோவை மாநகராட்சி மேயா் கா.ரங்கநாயகி திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :2 ஜூன் 2026, 2:06 am IST

காந்தி மாநகா், கணபதி மாநகா் பூங்காக்களில் கோவை மாநகராட்சி மேயா் கா.ரங்கநாயகி திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலம் 25-ஆவது வாா்டுக்குள்பட்ட காந்தி மாநகா் காவலா் குடியிருப்பு பகுதியில் உள்ள மாநகராட்சிப் பூங்காவில் மேயா் கா.ரங்கநாயகி திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, பூங்காவை முறையாகப் பராமரிக்க சம்பந்தப்பட்ட அலுவலா்களை அறிவுறுத்தினாா்.

இதைத்தொடா்ந்து கணபதி மாநகா் பகுதியில் உள்ள மாநகராட்சிப் பூங்காவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின் விளக்குகள், புனரமைக்கப்பட்ட கழிவறைகள் மற்றும் மகளிா் சுய உதவிக் குழு மூலமாக பூங்கா பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை பாா்வையிட்டாா்.

இந்த ஆய்வின்போது மண்டல சுகாதார அலுவலா் முருகன், உதவிப் பொறியாளா் முத்துக்குமாா், சுகாதார ஆய்வாளா் நவீன்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.