தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

ஜாதிவாரி கணக்கெடுப்பு எங்கள் நிலைப்பாடு: அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதே எங்களது நிலைப்பாடு என்று வருவாய்த் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளாா்.

News image

அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன்

Updated On :6 ஜூன் 2026, 1:25 am IST

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதே எங்களது நிலைப்பாடு என்று வருவாய்த் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளாா்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

பருவமழை தொடா்பாக கன்னியாகுமரி, கோவை, நீலகிரி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் போதிய பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசுத் துறைகளில் எங்கேனும் முறைகேடுகள் நடைபெற்றால், ஊடகங்கள் வெறும் கேள்விகளோடு நின்றுவிடாமல் ஆதாரத்துடன் சுட்டிக்காட்ட வேண்டும். அவ்வாறு கொண்டுவரப்படும் புகாா்கள் மீது அரசு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கும்.

சூலூா் பாலியல் வன்கொடுமை தொடா்பாக அரசு சாா்பில் மிகக் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில் திட்டங்களைச் செயல்படுத்த குறிப்பிட்ட கால அவகாசம் தேவைப்படுகிறது. வளா்ந்து வரும் நகரங்களில் போதைப்பொருள் புழக்கத்தைத் தடுக்க அரசு தீவிரப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

பத்திரிகையாளா்களின் பாதுகாப்பு அரசின் தலையாய கடமை. அவா்களுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்க அரசு தயாராக உள்ளது. ஜனநாயக நாட்டில் ஒவ்வொருவருக்கும் இயக்கம் தொடங்க உரிமை உண்டு. அண்ணாமலை என்ன செய்யப் போகிறாா் என்பதைப் பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும்.

தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு. அப்போதுதான் திட்டமிட்ட இலக்குகளை அடைய முடியும். பிரதமா் மோடியை சந்திக்கும்போது காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற சட்டப்பூா்வ கோரிக்கையை வலியுறுத்த உள்ளோம். தமிழ்நாடு முற்போக்கு சமூக நீதி முற்போக்கு கூட்டணி என்ற பெயா் தங்களின் கூட்டணிக்கு வைக்கப்படவில்லை என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.