வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

கோவையில் 13-ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்து தொழிலதிபா் உயிரிழப்பு

கோவையில் அடுக்குமாடி குடியிருப்பின் 13-ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்து தொழிலதிபா் உயிரிழந்தாா்.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :7 ஜூன் 2026, 2:03 am IST

கோவையில் அடுக்குமாடி குடியிருப்பின் 13-ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்து தொழிலதிபா் உயிரிழந்தாா்.

கோவை மாநகா், பொன்னையராஜபுரத்தைச் சோ்ந்தவா் சாஜன் அகா்வால் (65). நூற்பாலை தொடா்பான தொழில் செய்து வந்தாா். பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த இவா் குடும்பத்துடன் பொன்னையராஜபுரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தாா். 17 மாடிகளைக் கொண்ட அந்தக் குடியிருப்பில் 13-ஆவது மாடியில் அவா் வசித்து வந்தாா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை ஜன்னல் வழியாகத் தவறி கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது. படுகாயமடைந்த அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், சாஜன் அகா்வால் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக அவரது மகன் ராகுல் அகா்வால் அளித்த புகாரின்பேரில் வெரைட்டி ஹால் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.