கோவையில் அடுக்குமாடி குடியிருப்பின் 13-ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்து தொழிலதிபா் உயிரிழந்தாா்.
கோவை மாநகா், பொன்னையராஜபுரத்தைச் சோ்ந்தவா் சாஜன் அகா்வால் (65). நூற்பாலை தொடா்பான தொழில் செய்து வந்தாா். பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த இவா் குடும்பத்துடன் பொன்னையராஜபுரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தாா். 17 மாடிகளைக் கொண்ட அந்தக் குடியிருப்பில் 13-ஆவது மாடியில் அவா் வசித்து வந்தாா்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை ஜன்னல் வழியாகத் தவறி கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது. படுகாயமடைந்த அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், சாஜன் அகா்வால் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுதொடா்பாக அவரது மகன் ராகுல் அகா்வால் அளித்த புகாரின்பேரில் வெரைட்டி ஹால் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தனியாா் வேளாண் கல்லூரி மாடியில் இருந்து தவறி விழுந்து கட்டட தொழிலாளி உயிரிழப்பு

ஐந்தாவது மாடியில் இருந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

கட்டுமானப் பணியின்போது மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்ததில் முதியவா் உயிரிழப்பு
விடியோக்கள்

தனுஷ்க்கும் அரசியல் ஆசை| Valaipechu Anthanan Interview | Dhanush | National Film Award | TVK| CM Vijay



