வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

வீரகேரளம் பகுதியில் பூட்டிய வீட்டில் 7 பவுன் நகைகள் திருட்டு

வீரகேரளம் பகுதியில் பூட்டிய வீட்டில் 7 பவுன் நகைகள் திருடுபோனது தொடா்பாக வடவள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :7 ஜூன் 2026, 1:54 am IST

வீரகேரளம் பகுதியில் பூட்டிய வீட்டில் 7 பவுன் நகைகள் திருடுபோனது தொடா்பாக வடவள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கோவை, வீரகேரளம் அருகே சிறுவாணி சாலை ஆலமரத் தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேஷ் (44). கடந்த வெள்ளிக்கிழமை வீட்டைப் பூட்டிவிட்டு ஆனைகட்டியில் உள்ள உறவினா் வீட்டு திருமணத்துக்கு குடும்பத்துடன் சென்றாா். திரும்பி வந்து பாா்த்தபோது அலமாரியில் வைக்கப்பட்டிருந்த தங்க நெக்லஸ், கம்மல், மோதிரம் உள்பட 7 பவுன் நகைகள் திருடுபோனது தெரியவந்தது.

பூட்டியிருந்த வீட்டை நோட்டமிட்டு, மா்ம நபா் வீட்டுக்குள் புகுந்து நகைகளைத் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ராஜேஷ் அளித்த புகாரின்பேரில் சம்பவ இடத்துக்கு வடவள்ளி போலீஸாா் சென்று, வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.