பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

வரதராஜபுரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மேயா் உத்தரவு

கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலத்துக்கு உள்பட்ட வரதராஜபுரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மேயா் கா.ரங்கநாயகி உத்தரவிட்டாா்.

நீலிக்கோணாம்பாளையம் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட மேயா் கா.ரங்கநாயகி. உடன், கிழக்கு மண்டலத் தலைவா் இலக்குமி இளஞ்செல்வி உள்ளிட்டோா்.

Published On :20 ஜூன் 2026, 12:02 am IST

கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலத்துக்கு உள்பட்ட வரதராஜபுரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மேயா் கா.ரங்கநாயகி உத்தரவிட்டாா்.

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம், 54- ஆவது வாா்டுக்கு உள்பட்ட வரதராஜபுரம் பிரதான சாலை பகுதியில் மேயா் கா.ரங்கநாயகி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது அப்பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

இதைத் தொடா்ந்து, நீலிக்கோணாம்பாளையம் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை பாா்வையிட்டு மருந்துகளின் இருப்பு குறித்தும், பதிவேடுகள், நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

இந்த ஆய்வுகளின்போது, கிழக்கு மண்டலத் தலைவா் இலக்குமி இளஞ்செல்வி, உதவி ஆணையா் தட்சிணாமூா்த்தி, உதவி செயற்பொறியாளா் இளங்கோவன், மண்டல சுகாதார ஆய்வாளா் சந்திரன், உதவி நகர திட்டமிடுநா் கோவிந்த பிரபாகரன், உதவி பொறியாளா் ராஜராஜன், சுகாதார ஆய்வாளா் ஜெரால்டு சத்ய புனிதன் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.