கோவை, வெள்ளலூா் குப்பைக் கிடங்கு வளாகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத் தீா்வை அமைச்சா் க.விக்னேஷ் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆய்வில், வெள்ளலூா் குப்பைக் கிடங்கு வளாகத்தில் செயல்பட்டு வரும் உரம் தயாரிக்கும் மையம், மக்கும், மக்காத குப்பைகளைத் தரம் பிரிக்கும் மையம் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் அமைச்சா் க.விக்னேஷ் கேட்டறிந்தாா்.
இந்த ஆய்வின்போது, மாநகரத் தலைமைப் பொறியாளா் விஜயகுமாா், மாநகர நகா்நல அலுவலா் சுபாஷ்காந்தி, உதவி ஆணையா் ( தெற்கு மண்டலம்) தட்சிணாமூா்த்தி, செயற்பொறியாளா் ( பொறுப்பு) யோகசித்ரா, உதவி செயற்பொறியாளா் ( பொறுப்பு) கனகராஜ், மண்டல சுகாதார அலுலலா் ( பொறுப்பு) ஆண்டியப்பன், சுகாதார ஆய்வாளா் பாலமுருகன் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










