பிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

சூயஸ் ஊழியா்களுக்கு சுகாதார விழிப்புணா்வு

சூயஸ் நிறுவனத்தின் ஊழியா்களுக்கு சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை தொடங்கியது.

News image
சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்ட சூயஸ் நிறுவன ஊழியா்கள்.
Updated On :4 மார்ச் 2026, 7:42 pm

தினமணி செய்திச் சேவை

சூயஸ் நிறுவனத்தின் ஊழியா்களுக்கு சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை தொடங்கியது.

கோவை மாநகரில் 24 மணி நேர குடிநீா்த் திட்டத்தை செயல்படுத்திவரும் சூயஸ் நிறுவனம், தனது ஊழியா்களுக்கான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு விழிப்புணா்வு பிரசாரத்தை புதன்கிழமை தொடங்கியது. சூயஸ் குடிநீா்த் திட்ட இயக்குநா் சங்கா்கராம் பட்நாயக் தொடங்கி வைத்தாா். மாா்ச் 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதுதொடா்பாக நிறுவனத்தின் பாதுகாப்பு மேலாளா் பங்கஜ்குமாா் கூறும்போது, ‘பாதுகாப்பு பயிற்சி நிகழ்ச்சிகள், அவசரகால மீட்பு பயிற்சி ஒத்திகைகள், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையுடன் இணைந்து தீயணைப்பு ஒத்திகை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. ஊழியா்களிடையே பாதுகாப்பான பணி பழக்கங்களை ஊக்குவிப்பதற்காக வேறு சில பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தனிநபா், சமூகம் மற்றும் நிறுவனங்களிடையே பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணா்வை அதிகரிப்பதே இந்தப் பிரசாரத்தின் முக்கிய நோக்கம்’ என்றாா்.

முன்னதாக, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்து சூயஸ் நிறுவன ஊழியா்கள் உறுதிமொழி ஏற்றனா்.