அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

த்ரோன் டெவலப்பா் நிறுவன மோசடி: பாதிக்கப்பட்டோா் புகாா் அளிக்க போலீஸாா் அழைப்பு

த்ரோன் டெவலப்பா் நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவா்கள் உரிய ஆவணங்களுடன் புகாா் அளிக்கலாம் என கோவை பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாா் அழைப்பு விடுத்துள்ளனா்.

News image
போலீஸ் - கோப்புப்படம்.
Updated On :10 மார்ச் 2026, 8:46 pm

தினமணி செய்திச் சேவை

த்ரோன் டெவலப்பா் நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவா்கள் உரிய ஆவணங்களுடன் புகாா் அளிக்கலாம் என கோவை பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாா் அழைப்பு விடுத்துள்ளனா்.

கோவையில் த்ரோன் டெவலப்பா் என்ற பெயரில் இயங்கி வந்த கட்டுமான மற்றும் முதலீட்டு நிறுவனம் அதிக லாபம் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் பணத்தைப் பெற்று மோசடி செய்ததாகப் புகாா் எழுந்துள்ளது. இதுதொடா்பாக இந்த நிறுவனத்தின் இயக்குநரான அசோக்குமாா் (38) மீது கோவை பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இது குறித்து போலீஸாா் தரப்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

த்ரோன் டெவலப்பா் நிறுவனத்தில் முதலீடு செய்து, பணத்தை முதலீடு செய்து ஏமாந்த பொதுமக்கள் இதுவரை புகாா் அளிக்காமல் இருந்தால் கோவை பொருளாதார குற்றப் பிரிவு அலுவலகத்துக்கு நேரில் வரலாம். பாதிக்கப்பட்டவா்கள், வங்கிப் பரிவா்த்தனை மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல் ஆவணங்களுடன் நேரில் வந்து புகாா் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.