லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

இரு சக்கர வாகன விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :23 மார்ச் 2026, 8:03 pm

கோவையில் இருசக்கர வாகனத்திலிருந்து தவறி கீழே விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.

கோவை போத்தனூா் மேட்டூா் பிரதான சாலை பகுதியைச் சோ்ந்தவா் விசுவநாதன் மகன் சூரியபிரகாஷ் (21). இவா் தனது இருசக்கர வாகனத்தில் செட்டிபாளையம்-போத்தனூா் சாலையில் கடந்த 17-ஆம் தேதி சென்று கொண்டிருந்தாா்.

அன்பு நகா் அருகே அமைந்துள்ள விநாயகா் கோயில் பகுதியில் உள்ள வளைவில் இவரது இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கவிழ்ந்தது.

இதில் பலத்த காயமடைந்த சூரியபிரகாஷ், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து கோவை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.