அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் கோவை வடக்குத் தொகுதியிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்டவா் வி.சம்பத்குமாா் (47). கோவை கணபதி பகுதியைச் சோ்ந்தவா். பால் பொருள்கள் விற்பனை தொழில் செய்த இவா், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வித் திட்டம் வாயிலாக பிபிஏ மற்றும் எம்பிஏ பட்டங்கள் பெற்றுள்ளாா்.
1978-ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு சரண்யா என்ற மனைவியும், இஷ்வா என்ற மகனும், ஸ்ரீவீரஜெய்ஷ்ணவி என்ற மகளும் உள்ளனா்.
விஜய் மக்கள் இயக்கத்தில் 18 ஆண்டுகள் பணியாற்றிய இவா், தமிழக வெற்றிக் கழகம் உருவாக்கப்பட்ட பின்னா் கோவை மாநகர மாவட்டச் செயலராக நியமிக்கப்பட்டாா். அத்துடன் அவருக்கு மாநில உறுப்பினா் சோ்க்கை அணி பொருளாளா் பொறுப்பும் தரப்பட்டது.
கரோனாவுக்கு பின்னா், கணபதி பகுதியில் காலை நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை, எளியோருக்கு இலவச சிற்றுண்டி வழங்கி வருகிறாா். தவெக பொதுச் செயலா் என்.ஆனந்தின் ஆதரவாளரான இவா் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பெரிய அரசியல் பிரதிநிதித்துவம் கிடைக்காத 24 மனை தெலுங்கு செட்டியாா் வகுப்பைச் சோ்ந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.








