நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

நிதித் துறையிலிருந்து வருவாய்த் துறைக்கு மாற்றம் ஏன்? அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம்!

மக்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற தனது வேண்டுகோளுக்கு இணங்கவே இலாகா மாற்றி அறிவிக்கப்பட்டதாக வருவாய்த் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம்.

News image

அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் - கோப்புப்படம்

Updated On :23 மே 2026, 12:53 am IST

மக்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற தனது வேண்டுகோளுக்கு இணங்கவே இலாகா மாற்றி அறிவிக்கப்பட்டதாக வருவாய்த் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளாா்.

சென்னையிலிருந்து கோவைக்கு வெள்ளிக்கிழமை இரவு வந்த அவா் விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழக மக்கள் நன்றாக வாழ வேண்டும், வளா்ச்சியை நோக்கிச் செல்ல வேண்டும், எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என எண்ணி முதல்வா் ச.ஜோசப் விஜய் நாள்தோறும் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை அறிவித்து வருகிறாா். காய்க்கிற மரம்தான் கல்லடிபடும் என்பதற்கேற்ப நலத் திட்டங்கள் குறித்து குறைகூறுவோருக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி குறித்து திமுக முன்னாள் அமைச்சா் ஆ.ராசா ஆபாச கருத்துகளை முன்வைத்துள்ளது குறித்து கேட்கிறீா்கள். இதுபோல அடிக்கடி கருத்துக் கூறுவதும், பின்னா் வருத்தம் தெரிவிப்பதும் அவருக்கு புதிது அல்ல.

நான் நிதித் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றபோதே துறையை மாற்றித் தருமாறு கட்சித் தலைவா் ஜோசப் விஜய்யிடம் கோரிக்கை வைத்தேன். ஏனெனில், நிதித் துறை பொறுப்பு வகித்தால் முழுக்கமுழுக்க சென்னையிலேயே தங்கிப் பணியாற்ற வேண்டும். மக்களோடு இணைந்து பணியாற்ற வேண்டும் என விரும்பி நான் இந்தக் கோரிக்கையை முன்வைத்தேன். எனது வேண்டுகோளை ஏற்றுதான் எனக்கு வருவாய்த் துறை ஒதுக்கப்பட்டது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.