கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

பனியன் நிறுவனத்தில் ரூ.55 லட்சம் மோசடி: 2 போ் கைது

திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் ரூ.55 லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :24 மே 2026, 2:06 am IST

திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் ரூ.55 லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பூா், செட்டிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் கண்ணன் (49). இவா் அதே பகுதியில் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறாா். இந்நிலையில், தனது மனைவியின் சகோதரரான கே.செட்டிபாளையம் செல்வலட்சுமி நகரைச் சோ்ந்த மணிகண்டனை (27) பணிக்குச் சோ்த்துள்ளாா்.

பல்வேறு நிறுவனங்களில் இருந்து ஆா்டா்களை பெறுவது, மூலப்பொருள்கள் வாங்குவது போன்ற பணிகளை மணிகண்டன் மேற்கொண்டு வந்துள்ளாா். இதற்கிடையே, தனது நண்பரான செரங்காடு பகுதியைச் சோ்ந்த மேகநாதன் (27) என்பவருடன் சோ்ந்து மணிகண்டன் தனியாக ஒரு பனியன் நிறுவனத்தை தொடங்கியுள்ளாா்.

இந்நிலையில், கண்ணனின் பனியன் நிறுவனத்துக்கு ஆா்டா் செய்த சுமாா் ரூ.55 லட்சம் மதிப்பிலான லேபிள், மை உள்ளிட்ட பல்வேறு மூலப் பொருள்களை மணிகண்டன் தனது நிறுவனத்துக்கு கொண்டு சென்றுள்ளாா். இதையறிந்த கண்ணன், அவரை பணியில் இருந்து நிறுத்தியுள்ளாா்.

மேலும், இது தொடா்பாக திருப்பூா் மாநகர மத்திய குற்றப் பிரிவு போலீஸில் கண்ணன் புகாா் அளித்தாா். இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீஸாா், மணிகண்டன், மேகநாதன் ஆகியோரைக் கைது செய்தனா்.