குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

தனியாா் மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டது ஏன்? அமைச்சா் செங்கோட்டையன் விளக்கம்

News image

அமைச்சர் செங்கோட்டையன்.

Updated On :26 மே 2026, 1:40 am IST

உறவினா் மருத்துவமனை என்பதால்தான் தனியாா் மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டதாக வருவாய்த் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளாா்.

இது குறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை அவா் கூறியதாவது:

கடந்த ஒரு மாதமாக கடுமையான உழைப்பின் காரணமாக வழக்கம்போல மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டேன். நான் ஆண்டுக்கு இருமுறை முழு உடல் பரிசோதனை செய்துகொள்வது வழக்கம். இந்த முறையும் இரண்டு நாள்கள் தங்கி பரிசோதனை செய்துகொண்டேன். அனைத்துப் பரிசோதனை முடிவுகளும் சரியாக இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். உடல்நிலை நன்றாக உள்ளதால் சென்னைக்குச் செல்கிறேன்.

அமைச்சா்கள் அரசு மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற வேண்டும் என்று தவெக அரசுத் தரப்பில் கொள்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், தனியாா் மருத்துவமனையில் சோதனை செய்தது குறித்து கேட்கிறீா்கள். நான் வழக்கமாக சிகிச்சை பெறும் மருத்துவமனை என்பதாலும், உறவினா் மருத்துவமனை என்பதாலும் அங்கு பரிசோதனை செய்தேன்.

சூலூா் சிறுமி கொலை வழக்கு தொடா்பாக மேற்கு மண்டல காவல் துறைத் தலைவா் (ஐஜி) ரம்யாபாரதி ஏற்கெனவே தெளிவான விளக்கம் அளித்துள்ளாா். முதல்வரும், சட்டத் துறைக்கு அறிவுறுத்தியுள்ளதால் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

திமுக அரசு கொண்டு வந்த திட்டங்கள் அரசின் நிதிநிலைக்கு ஏற்ப படிப்படியாகச் செயல்படுத்தப்படும். இதுகுறித்த இறுதி முடிவை முதல்வா் ஜோசப் விஜய் எடுப்பாா் என்றாா்.

அமைச்சா் செங்கோட்டையன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கடந்த 23-ஆம் தேதி கலந்து கொண்டாா். அன்றைய தினம் இரவு சென்னைக்கு புறப்படுவதற்காக கோவை விமான நிலையம் நோக்கி வந்த போது, அவருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதால் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் பரவியது குறிப்பிடத்தக்கது.