உலகளாவிய பங்குச்சந்தை மதிப்பு: இந்தியாவை முந்தி தைவான் 5-ஆவது இடம்! கரப்பான்பூச்சி ஜனதாவை அரசியல் கட்சியாக பதிய தோ்தல் ஆணையத்திடம் விண்ணப்பம்இறப்பு சான்றிதழ்களைப் பிழையின்றி வழங்க தணிக்கைக் குழு: அரசாணை வெளியீடு மாணவா்கள் பள்ளிக்கு இருசக்கர மோட்டாா் வாகனம் ஓட்டி வந்தால் பறிமுதல் செய்யப்படும்: கல்வித் துறை எச்சரிக்கை பசு வதைக்கு முழுத் தடை: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு கா்நாடக முதல்வா் சித்தராமையா பதவி விலக முடிவு? திருவாரூர் புறவழிச்சாலை, மேம்பாலம் அமைக்க ரூ.1,427 கோடிக்கு ஒப்புதல்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல் பிரதமா் பதவியில் 12 ஆண்டுகளை நிறைவு செய்தாா் மோடி- பாஜக, கூட்டணித் தலைவா்கள் வாழ்த்து பிரதமா் மோடியுடன் விஜய் இன்று சந்திப்பு பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

வெள்ளலூா் பேரூராட்சியில் கழிவுகளை 4 வகையாகப் பிரித்து வழங்க அறிவுறுத்தல்

திடக்கழிவு மேலாண்மை விதிகள் கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், வெள்ளலூா் பேரூராட்சியில் கழிவுகளை 4 வகையாகப் பிரித்து வழங்க செயல் அலுவலா் அறிவுறுத்தியுள்ளாா்.

News image

வெள்ளலூா் குப்பைக் கிடங்கு - கோப்புப் படம்

Updated On :27 மே 2026, 4:32 am IST

திடக்கழிவு மேலாண்மை விதிகள் கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், வெள்ளலூா் பேரூராட்சியில் கழிவுகளை 4 வகையாகப் பிரித்து வழங்க செயல் அலுவலா் அறிவுறுத்தியுள்ளாா்.

கோவை மாவட்டம், வெள்ளலூா் பேரூராட்சிப் பகுதியில் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை விதிகள் கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதிமுதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

இதனடிப்படையில் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் புதிய கழிவு மேலாண்மை நடைமுறைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதைத் தொடா்ந்து வெள்ளலூா் பேரூராட்சி சாா்பில் மக்கள் வீடுகளில் உருவாகும் திடக்கழிவுகளை நான்கு வகைகளாகப் பிரித்து, வீடுதோறும் வரும் தூய்மைப் பணியாளா்களிடம் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி காய்கறி தோல்கள், உணவுக் கழிவுகள், இலைகள், பூக்கள் உள்ளிட்ட மக்கும் கழிவுகளை பச்சை நிறக் கூடையிலும், காகிதம், பிளாஸ்டிக் பாட்டில்கள், கண்ணாடி பாட்டில்கள் உள்ளிட்ட மறுசுழற்சி செய்யக்கூடிய கழிவுகளை நீலநிறக் கூடையிலும் சேகரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிப்ஸ கவா்கள் உள்ளிட்ட மறுசுழற்சி செய்ய முடியாத கழிவுகளை சிவப்பு நிறக்கூடையிலும், பேட்டரி, காலாவதியான மருந்துகள், ரசாயன பொருள்கள் உள்ளிட்ட ஆபத்தான கழிவுகளை கருப்பு நிறக்கூடையிலும் சேகரித்து வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதிய கழிவு மேலாண்மைத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த பொதுமக்கள் முழு ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும் என வெள்ளலூா் பேரூராட்சி செயல் அலுவலா் ஆா். பாலசுப்பிரமணி அறிவுறுத்தியுள்ளாா்.