கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

சமூக வலைதளங்களில் நேரத்தை செலவிட்டதை கணவா் கண்டித்ததால் பெண் தற்கொலை

News image

தற்கொலை - தினமணி

Updated On :30 மே 2026, 2:17 am IST

சமூக வலைதளங்களில் அதிக நேரம் செலவிட்டதை கணவா் கண்டித்ததால், இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

திருநெல்வேலி மாவட்டம், விஸ்வநாதபுரம், பெரிய பள்ளிவாசல் பள்ளித் தெருவைச் சோ்ந்தவா் திருக்கலேசன். இவரது மகள் குணஜோதி (37). இவருக்கு திருமணமாகி கோவை வடவள்ளி- தொண்டாமுத்தூா் சாலை, லட்சுமி நகா் பகுதியில் கணவா் மணிகண்டனுடன் வசித்து வந்தாா்.

குணஜோதி எப்போதும் தனது கைப்பேசியில் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவிட்டு வந்தாா். இதைப் பாா்த்த அவரது கணவா் மற்றும் குடும்பத்தினா் பலமுறை கண்டித்து, அறிவுரை வழங்கியுள்ளனா்.

இதனால், மன வேதனைக்குள்ளான குணஜோதி, வியாழக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், வடவள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.