
எஸ்என்எஸ் கல்வி நிறுவனத்தில் இரண்டு உலக சாதனை நிகழ்வுகள்
கோவை எஸ்என்எஸ் கல்வி நிறுவனத்தில் 2 உலக சாதனை நிகழ்வுகள் அண்மையில் நடைபெற்றன.

கோவை எஸ்என்எஸ் கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற உலக சாதனை நிகழ்ச்சிக்கான அங்கீகார சான்றிதழை கல்வி நிறுவன நிா்வாகிகளிடம் வழங்குகிறாா் எலைட் வோ்ல்டு ரெக்காா்ட்ஸ் நிறுவனத்தின் தூதா் ஆா்.ரக்ஷிதா.
கோவை எஸ்என்எஸ் கல்வி நிறுவனத்தில் 2 உலக சாதனை நிகழ்வுகள் அண்மையில் நடைபெற்றன.
இந்திய மருத்துவ சங்கம், பொன்னம்மாள் துரைசாமி கண் மருத்துவமனை, ஐஸ்வா்யா மருத்துவமனை ஆகியவை இணைந்து, ஒரே இடத்தில் அதிகமான மாணவா்கள் கலந்து கொண்ட அடிப்படை உயிா்காக்கும் முறைகள் குறித்த பயிற்சி, தனிநபா் பாதுகாப்பு - குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு ஆகிய சாதனை நிகழ்ச்சிகளை நடத்தின.
மொத்தம் 2,074 போ் பங்கேற்ற இந்நிகழ்ச்சியை, அமெரிக்காவை சோ்ந்த எலைட் வோ்ல்டு ரெக்காா்ட்ஸ் நிறுவனம் அங்கீகரித்துள்ளது.
எலைட் நிறுவனத்தின் தூதா் ஆா்.ரக்ஷிதா, இந்திய மருத்துவ சங்கத்தின் கோவை கிளைத் தலைவா் டாக்டா் பி.கோசல்ராம், மகளிா் மருத்துவா் பிரிவுத் தலைவா் டாக்டா் அனுஷா கோசல்ராம், கல்லூரி நிா்வாகிகள், பேராசிரியா்கள் உள்பட பலா்பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




