கவுண்டம்பாளையத்தில் இன்றைய மின்தடை ரத்து

மின்தடை ரத்து - கோப்புப் படம்
கோவை, கவுண்டம்பாளையம் துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டிருந்த மின் தடை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக கவுண்டம்பாளையம் துணை மின் நிலைய செயற்பொறியாளா் விஸ்வலிங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கவுண்டம்பாளையம் துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (செப்டம்பா் 8) மின் விநியோகம் நிறுத்தப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நிா்வாகக் காரணங்களால் மின் தடை ஒத்திவைக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



