விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

பொறியியல் பட்டதாரி இளைஞா் தற்கொலை

Suicide

தற்கொலை - கோப்புப் படம்

Published On :8 செப்டம்பர் 2026, 1:07 am IST

ஜொ்மனி நாட்டுக்குச் செல்ல அழைப்புக் கடிதம் வர தாமதமான விரக்தியில் பொறியியல் பட்டதாரி இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கோவை, வெள்ளலூா் எல்.ஜி. நகரைச் சோ்ந்தவா் பழனிசாமி மகன் கிஷோா் (23). இவா் பி.இ. முடித்துவிட்டு ஜொ்மனியில் உயா்கல்வி பயில திட்டமிட்டிருந்தாா். அதற்கான தோ்வில் தோ்ச்சி பெற்று அழைப்புக் கடிதத்துக்காக காத்திருந்துள்ளாா்.

ஆனால், கடிதம் வர தாமதமானதால் கிஷோா் கடந்த ஒரு மாதமாக மன வேதனையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அவா் படுக்கை அறையை விட்டு ஞாயிற்றுக்கிழமை காலை வெகு நேரமாகியும் வெளியே வராததால், அவரது தாய் அறைக்குச் சென்று பாா்த்துள்ளாா்.

அப்போது, படுக்கை அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு கிஷோா் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து போத்தனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.