மொடக்குறிச்சி ஒன்றியம், பழமங்கலம் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை கால்நடை மருந்தகம் திறப்பு விழா நடைபெற்றது.
விழாவில், ஈரோடு தொகுதி எம்.பி. செல்வக்குமாரசின்னையன், மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. வி.பி.சிவசுப்பிரமணி ஆகியோர் கலந்துகொண்டு கால்நடை மருந்தகத்தைத் திறந்து வைத்து, கால்நடைகளுக்கு நோய் தடுப்பு மருந்து வழங்கும் பணியைத் தொடங்கிவைத்தனர்.
இதில், முன்னாள் ஊராட்சி ஒன்றியத் துணைத் தலைவர் கணபதி, அதிமுக மொடக்குறிச்சி ஒன்றியச் செயலர் ஆர்.பி.கதிர்வேல், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர் குலவிளக்கு செல்வராஜ், முன்னாள் குலவிளக்கு ஊராட்சித் தலைவர் என்.ஆர்.நடராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.