தமிழ்நாடு கூட்டுறவு கைத்தறித் துணிநூல் ஆலையில் ரூ. 2.20 கோடி மதிப்பில் நடைபெற்றுவரும் பராமரிப்புப் பணிகளை கைத்தறி, கதர்த் துறையின் முதன்மைச் செயலர் க.பணீந்தர ரெட்டி புதன்கிழமை ஆய்வுசெய்தார்.
ஈரோடு அசோகபுரத்தில் உள்ள ஆலைக்குப் புதன்கிழமை வந்த பணீந்தர ரெட்டி, தமிழ்நாடு பஞ்சாலைக் கழகம், தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கம் போன்ற முகமை நிறுவனங்களிலிருந்து பெறப்படும் துணி ரகங்கள் எவ்வாறு பதனிடப்படுகிறது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், ஆலையின் மடிப்பு பிரிவில் தமிழக அரசின் சீருடை திட்ட மாதிரித் துணிகள், கேரள அரசின் சீருடை திட்ட மாதிரி துணிகள், இதர நிறுவனங்களின் துணிகள், கிரே செக்கிங், துணி தைத்தல், பிளீச்சிங் செய்தல், பாலிஸ்டர் சாயமிடுதல், காட்டன் சாயமிடுதல், துணி உலர வைத்தல், துணி ரகங்கள் பிளிசிங் செய்தல், துணி மடித்தல், பொட்டலம் செய்தல் பணிகளையும் பார்வையிட்டார்.
இந்த ஆலையில் தற்போது தேசிய கைத்தறி வளர்ச்சித் திட்டத்தின் மூலம் ரூ.2.20 கோடி மதிப்பிலான புதிய இயந்திரங்கள் நிறுவுதல், தொழிற்சாலை, அலுவலக கட்டடங்களைப் பழுதுபார்த்தல், புனரமைத்தல் போன்ற பணிகளையும் பணீந்தர ரெட்டி ஆய்வு செய்தார். ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர், தமிழ்நாடு கூட்டுறவுத் துணிநூல் பதனிடும் ஆலையின் தலைவர் எம்.ஜி.பழனிசாமி, தமிழ்நாடு கூட்டுறவுத் துணிநூல் பதனிடும் ஆலையின் நிர்வாக இயக்குநர் எஸ்.சண்முகசுந்தரம், கைத்தறி, துணிநூல் துறையின் உதவி இயக்குநர் எஸ்.பிச்சைமுத்து உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.