ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

பவானி ஆற்றிலிருந்து மணல் கடத்தப் பயன்படுத்தப்பட்ட மினி  லாரியை வருவாய்த் துறையினர் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர். 

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 7:31 pm

DIN

பவானி ஆற்றிலிருந்து மணல் கடத்தப் பயன்படுத்தப்பட்ட மினி  லாரியை வருவாய்த் துறையினர் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர். 
 பவானி வட்டார, தலைமையிடத்துத் துணை வட்டாட்சியர் சரவணன் தலைமையில் வருவாய்த் துறையினர் திங்கள்கிழமை அதிகாலை பவானி ஆற்றங்கரையோரப் பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அதிவேகமாகச் சென்ற மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, ஆற்றிலிருந்து விற்பனைக்காக மணலைக் கடத்திச் சென்றது தெரியவந்தது. 
 விசாரணையில், ஒரிச்சேரியைச் சேர்ந்த சின்னசாமி என்பவருக்குச் சொந்தமான லாரி என்பதும், எலவமலை பகுதியில் பவானி ஆற்றிலிருந்து மணலை விற்பனைக்கு ஏற்றிச் சென்றதும் தெரியவந்தது.
 இதையடுத்து, வாகனத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் அபராதம் விதிக்க கோபி கோட்டாட்சியருக்குப் பரிந்துரை செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.