தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

வாகனம் மோதி புள்ளிமான் சாவு

சத்தியமங்கலம் அருகே வாகனம் மோதியதில் 4 வயதுள்ள பெண் புள்ளிமான் உயிரிழந்தது.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 7:30 pm

DIN

சத்தியமங்கலம் அருகே வாகனம் மோதியதில் 4 வயதுள்ள பெண் புள்ளிமான் உயிரிழந்தது.
 சத்தியமங்கலத்தை அடுத்த சிக்கரசம்பாளையம் வனப் பகுதியில் இருந்து வந்த 6 வயதுள்ள பெண் புள்ளிமான் சிக்கரசம்பாளையம் பெட்ரோல் பங்க் மைசூரு சாலையைக் கடக்க முயன்றது. அப்போது, அவ்வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த அந்த மான் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது. அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் மானுக்குத் தண்ணீர் கொடுத்து உதவினர்.
 இதுகுறித்து, சத்தியமங்கலம் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த வனத் துறையினர் மயக்க நிலையில் இருந்த மானை மீட்டு சிகிச்சை அளித்தனர். ஆனால், அந்த மான் உயிரிழந்தது.
 கால்நடை மருத்துவர் அசோகன் முன்னிலையில், மானின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு பண்ணாரி வனத்தில் புதைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.