
ஈரோட்டில் வியாழக்கிழமை கூடிய மாட்டுச் சந்தையில் பசு, எருமை கறவை மாடுகள், வளர்ப்புக் கன்றுக் குட்டிகள் ஆகியவை ரூ. 3.5 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளன.
ஈரோடு, கருங்கல்பாளையத்தில் காவிரிக்கரை சோதனைச்சாவடி அருகே வாரந்தோறும் புதன், வியாழன் ஆகிய இரு நாள்களில் மாட்டுச் சந்தை நடைபெறுகிறது.
அதில், புதன்கிழமை வளர்ப்பு மாடுகளும், வியாழக்கிழமை கறவைப் பசு மாடுகளும், எருமை மாடுகள், வளர்ப்புக் கன்றுக்குட்டிகளும் விற்பனை செய்யப்படுகின்றன. வியாழக்கிழமை நடைபெற்ற சந்தையில், அனைத்து மாநில வியாபாரிகள், விவசாயிகள், மாடுகள் வரத்தும் சென்ற வாரத்தைவிட அதிகரித்தே காணப்பட்டது.
இதுகுறித்து, மாட்டுச் சந்தை மேலாளர் ஆர்.முருகன் கூறியதாவது:
மழை குறைந்ததன் காரணமாக கேரளம், கர்நாடக மாநில வியாபாரிகள் உள்பட அனைத்துப் பகுதி வியாபாரிகள், விவசாயிகள் வழக்கம்போல சந்தைக்கு வந்திருந்தனர். மகாராஷ்டிர வியாபாரிகள் வரவில்லை. இந்த வாரச் சந்தையில் 400 பசு மாடுகள், 300 எருமைகள், 200 வளர்ப்புக் கன்றுகள் விற்பனை செய்யப்பட்டன.
இதில், பசு மாடு ரூ. 16 ஆயிரம் முதல் ரூ. 36 ஆயிரம் வரையிலும், எருமை மாடு ரூ. 18 ஆயிரம் முதல் ரூ. 38 ஆயிரம் வரையிலும், வளர்ப்புக் கன்றுகள் ரூ. 2 ஆயிரம் முதல் ரூ. 12 ஆயிரம் வரையிலும் விற்பனை ஆகியுள்ளன.
மொத்தம் சுமார் ரூ. 3.5 கோடிக்கு வணிகம் நடைபெற்றுள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





