மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கொங்கு பொறியியல் கல்லூரியுடன் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

பெருந்துறையில் உள்ள கொங்கு பொறியியல் கல்லூரியின் கட்டடவியல் துறையில், இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :7 ஆகஸ்ட் 2020, 12:49 pm

DIN

ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் உள்ள கொங்கு பொறியியல் கல்லூரியின் கட்டடவியல் துறையில், இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 

இந்த ஒப்பந்தத்தின் நோக்கம், பிரதேசப் புவியியல் அலுவலர்களுடன் இணைந்து சமூதாய பொறுப்புடமையை மிகைப்படுத்துவதாகும். மேலும், பல்வேறு சிறப்பம்சங்களாக மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு, அனுபவத்தை பெறுவதற்கான தொழிற்சார்ந்த பயிற்சி, மாணவர்களுக்கு மட்டுமல்லாது ஆசிரியர்களுக்கு ஏதுவாக நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறையில் பயன்படுத்தப்படும் சமீபத்திய தொழில்நுட்பத்தின் நுணுக்கங்களை அறிந்து அதை தங்களுடைய ஆராய்ச்சிக்கு ஏற்றவாறு உபயோகப்படுத்த சாதகமாகவும் அமைந்துள்ளது. 

எனவே, இந்த ஒப்பந்தம் கல்லூரிக்கும், இந்திய தேசிய நெடுஞ்சாலை துறைக்கும் ஒரு பாலமாக அமையும். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்போது, கொங்கு பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர் பாலுசாமி, தேசிய நெடுஞ்சாலை துறையின் திட்டப்பணி மேலாளர் வரதராஜன், ஐஐபிசி தலைவர் முனைவர் சத்தியமூர்த்தி, துறை தலைவர் முனைவர் கோதை மற்றும் உதவி பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.