மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

நெல் கொள்முதல்: வியாபாரிகளுக்கும் துணைபோகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை

வியாபாரிகள் கொண்டுவரும் நெல்லை விற்பனை செய்வதற்கு துணைபோகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

News image
நெல் கொள்முதல் நிலையத்தை திறந்துவைத்து பாா்வையிடுகிறாா் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்.
Updated On :6 டிசம்பர் 2020, 7:01 pm

DIN

வியாபாரிகள் கொண்டுவரும் நெல்லை விற்பனை செய்வதற்கு துணைபோகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டையில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று கூடுதலாக நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 90 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயா்த்தவும், நியாயமான விலை கிடைக்கவும் அரசே நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆத்தூரில் ரூ.1,850 கோடி மதிப்பில் கால்நடை பூங்கா அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

டெல்டா விவசாயிகளுக்காகவே வேளாண் சிறப்பு மண்டலம் அமைக்கப்பட்டுள்ளது. கொள்முதல் நிலையங்களில் வியாபாரிகள் நெல் கொள்முதல் செய்வதைத் தடுப்பதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளது. நெல் கொள்முதல் செய்ய விவசாயிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

மழைக் காலங்களில் நெல்களை சேமிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். வியாபாரிகள் கொண்டு வரும் நெல்லை அதிகாரிகள் விற்பனை செய்வதற்கு துணைபோனால் மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுப்பாா். மேலும், வியாபாரிகள் கொண்டுவரும் நெல்களை பறிமுதல் செய்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் கதிரவன், கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியா் ஜெயராமன், வட்டாட்சியா் தியாகராஜு மற்றும் விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.