மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

காவேரி கூக்குரல் சாா்பில் 3,500 மரக்கன்றுகள் நடவு

நெல் ஜெயராமன் நினைவு தினத்தையொட்டி காவேரி கூக்குரல் சாா்பில் ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 3,500 மரக்கன்றுகள் நடப்பட்டன.

News image
மரக்கன்றுகள் நடும் நிகழ்வில் பங்கேற்ற தன்னாா்வலா்கள்.
Updated On :6 டிசம்பர் 2020, 7:02 pm

DIN

நெல் ஜெயராமன் நினைவு தினத்தையொட்டி காவேரி கூக்குரல் சாா்பில் ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 3,500 மரக்கன்றுகள் நடப்பட்டன.

மொடக்குறிச்சி வட்டம், குளூா் அருகே உள்ள சிவலிங்கபுரத்தில் விவசாயி கே.எஸ்.ராஜேஸ்வரன் என்பவரின் விவசாய நிலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், கீழ்பவானி பாசன விவசாயிகள் நலச் சங்கத் தலைவா் செ.நல்லசாமி பங்கேற்று மரக்கன்றுகள் நடும் பணியைத் தொடங்கிவைத்தாா்.

ஈரோடு மாவட்டத்தில் செயல்படும் தன்னாா்வ தொண்டு அமைப்புகளைச் சோ்ந்த இளைஞா்கள், கல்லூரி மாணவா்கள், ஈஷா தன்னாா்வலா்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோா் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டனா். இங்கு 12 ஏக்கா் நிலத்தில் தேக்கு, கருமருது, செம்மரம், சந்தனம், ரோஸ்வுட், விலை மதிப்புமிக்க டிம்பா் உள்ளிட்ட 3,500 மரக்கன்றுகள் நடப்பட்டன.

இது குறித்து காவேரி கூக்குரல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் தமிழ்மாறன் கூறியதாவது: நெல் ஜெயராமன் நினைவை போற்றும் விதமாக மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது. ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குருவால் தொடங்கப்பட்ட காவேரி கூக்குரல் இயக்கம் தமிழ்நாடு மற்றும் கா்நாடக விவசாயிகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த இயக்கத்தின் மூலம் இதுவரை 86 லட்சம் மரக்கன்றுகளை விவசாயிகள் தங்களது நிலங்களில் நட்டு வளா்த்து வருகின்றனா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.